28 Feb 2011

உணவில் அதிகம் உப்பு சேர்ப்பவரா நீங்கள்! உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் கவனம்???

"உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மேற்கத்திய நாடுகளில், பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

இந்தியாவில் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது' என, ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த முடிவு கவலையளிப்பதாக உள்ளது. 

காரணம், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், இதய பாதிப்பு, இதயம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு, ரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண் பார்வை பறிபோதல் ஆகியவை ஏற்படும். 

நினைவுத் திறனும் குறைந்து, சீரான சிந்தனை தடை படும். இருபது வயதை அடைந்து விட்டாலே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட்டால், ஆண்டுதோறும், ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக்கமாக கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் என்பது, ரத்த நாளத்தின் மீது, இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தம் பாயும் வேகத்தை குறிக்கும். 

இது, இரண்டு வகையிலான அளவில் கணக்கெடுக்கப்படுகிறது. ஒன்று, இதயம் சுருங்கும் போது வெளியேற்றப்படும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (சிஸ்டோலிக்) மற்றொன்று, இதயத்தின் கீழறைகள் விரியும் போது வெளியேறும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (டயஸ்டோலிக்.) அதாவது, 120/80 என்பது சீரான ரத்த அழுத்தத்தின் அளவு. 139/89 என்பது, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான முந்தைய நிலை; 140/90 என்ற அளவோ, அதற்கு மேலோ, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுவிட்ட நிலையை குறிக்கிறது. வயது ஏற ஏற, ரத்தக் குழாய்கள் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை இழந்து தடித்து விடுகின்றன. 

இந்த பாதிப்பு ஏற்படும் போது, சிஸ்டோலிக் அழுத்தம் மட்டும் அதிகரித்து காணப்படும். 60 வயதை தாண்டிய 70 சதவீதத்தினருக்கு, இது போன்ற ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. 

வயது அதிகரிப்பு, உடல் எடை அதிகரிப்பு, பாரம்பரியமாக ரத்த அழுத்தம் ஏற்படும் தன்மை, சிறுநீரக நோய்கள், நீரிழிவு நோய், சுரப்பி நோய்கள், புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், கார்ட்டிகோஸ்டிராய்டு, கருத்தடை மாத்திரைகள், உடல் எடை குறைப்பு மாத்திரைகள் சாப்பிடுவது ஆகியவை, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். பிறப்பிலேயே ரத்தக் குழாய்கள் சுருங்கி காணப்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். 

எந்த காரணமும் இன்றி, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால், அதற்கு, "எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' என்று பெயர். இதனால் ஏற்படும் சிக்கலை தவிர்க்க, அவசியம் மருந்து உட்கொள்ள வேண்டும். "சிஸ்டோலிக்' வகை உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குக் கூட மருந்து உட்கொள்ளுதல் அவசியம். 

உணவில் சேர்க்கும் உப்புக்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. அதிக உப்பு சேர்த்து கொண்டால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். சிலருக்கு, சிறியளவில் உப்பு சேர்த்து கொண்டாலே, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மக்கள் தொகையில், 20 சதவீதத்தினர் இவ்வகையை சேர்ந்தவர்கள். சீரான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும், 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. 

நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு, நாள் ஒன்றுக்கு, மொத்தமாக தேவைப்படும் உப்பு, 4 டீஸ்பூன் தான். உப்பு அளவை கணக்கிடும் போது, உணவில் இயற்கையாகவே உள்ள உப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா உணவிலும் - குடிநீரில் கூட, இயற்கை உப்பு உள்ளது. 

எல்லா வகையான உணவு தயாரிப்பிலும், ஏதாவது ஒரு வகையான உப்பு சேர்க்கப்படுகிறது. மோனோசோடியம் க்ளூடாமேட், சோடியம் நைட்ரைட், சோடியம் சாச்சரின், சோடியம் பைகார்பொனேட் (பேக்கிங் சோடா), சோடியம் பென்சொயேட் ஆகிய ஏதாவது ஒரு உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ், ஊறுகாய் வகைகளில் சேர்க்கப்படுகிறது. 

பதப்படுத்தப்பட்ட ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, இறைச்சியை உள்ளடக்கி செய்யப்படும் பலகாரங்கள், பர்கர், பிட்சா ஆகியவற்றில், அதிகளவு உப்பு சேர்க்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தைச் சீராக்க, நிறைய மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, இவ்வகையான மருந்துகளையும் சிறியளவில் உட்கொண்டு வந்தால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். 

இதற்கு சுய முயற்சி தேவை. பல மருத்துவர்களும், நோயாளிகளும், மாத்திரையின் அளவைக் கூட்டிக் கொள்வதோடு சிகிச்சை முடிந்ததாக கருதுகின்றனர். புரிந்து கொள்ளுங்கள்... வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது, மாத்திரை உட்கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகளைக் கொண்டது அல்ல! உங்கள் உடல் எடை, சீராக இருக்க வேண்டியது அவசியம். 

உடல் எடை அதிகரிக்கும் போது, ரத்தக் குழாய்களுக்கான அழுத்தம் அதிகரிக்கும். எனவே, பி.எம்.ஐ., அளவைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். செயலற்றுக் கிடப்பவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து, தேவைக்கு அதிகமான பணி செய்யும் நிலை ஏற்படும். எனவே, இதயம் சீக்கிரம் செயலிழக்கும். நடைபயிற்சி, மித ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். 

6 வயது முதலே இதை துவங்கலாம். முதலில் 20 நிமிட ஓட்டமாக துவங்கி, 18 வயது நிரம்பியவுடன், ஒரு மணி நேர ஓட்டமாக அதிகரித்துக் கொள்ளலாம். புகை பிடிப்பது, அருகில் இருப்பவர் விடும் புகையை சுவாசிப்பது, மூக்குப்பொடி போடுவது, புகையிலை மெல்வது ஆகியவை, ரத்தக் குழாய்களை பாதிக்கும் வகையிலான ரசாயனங்களை வெளியிடுகின்றன. 

இவை ரத்தக் குழாய்களை சுருக்கி விடுவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உணவில் தினமும் 5 கிராமோ அல்லது அதற்கு குறைவான அளவோ, உப்பு சேர்ப்பது நல்லது. உடலில் நீர் சத்தை தக்க வைக்க இது பயன்படும். இந்த அளவை மீறினால், அதே நீரே, உடலில் தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். 

பழங்கள், காய்கறிகளில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் சேரும் உப்புச் சத்தை அதிகரிக்க விடாமல் செய்கிறது. எனவே, தினமும் 4 முதல் 6 முறை பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். உணவு மூலமாக கிடைக்கும் அல்லது சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி சத்து, சிறுநீரகத்தில் நொதிகளைச் சீராகச் செயல்பட வைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பாதுகாக்கும். 

எனினும், அதிகளவிலோ அல்லது தாறுமாறாகவோ வெயிலில் அலைய நேர்ந்தால், ரத்த அழுத்தமும் சீரற்றதாகி விடும். மது அருந்துவது, இதயத்தை பாதிக்கிறது. ஒரே நேரத்தில் 2 அல்லது 3 கோப்பை மது அருந்தினால் கூட, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றும். அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, இதயம் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகி விடும். தொடர்ந்து அதிக பதட்டத்துடன் இருந்தாலும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். 

தியானம், யோகா ஆகியவற்றின் மூலம் பதட்டத்தை தவிர்க்கலாம். பதட்டத்தை தவிர்க்க, சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். நீரிழிவு நோய், அதிக கொழுப்புச் சத்து சேர்வது, சிறுநீரக நோய், தூக்கமின்மை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். 

அவை, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணிகள். இப்போதெல்லாம், 6 - 8 வயது குழந்தைகள் கூட, அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்கின்றனர். அதை ஈடு கட்டும் வகையிலான உடற்பயிற்சிகள் செய்வதில்லை. எனவே, அவர்களின் வாழ்க்கையை முறையை, இளம் வயதிலேயே மாற்றினால், இப்பிரச்னையை தவிர்க்கலாம்



Thanks-Tamil CNN

23 Feb 2011

பூமியில் நடக்கப் போகும் இயற்கை நிகழ்வுகளை முன்கூட்டியே அறிய முடியும்: ஆராய்ச்சித் தகவல்



வெயில், காற்று, மழை, புயல், சூறாவளி, காட்டுத்தீ என இயற்கை சீறும் போது மனிதகுலம் பெரிதாக பாதிக்கப்படுகிறது. இவற்றை தடுக்க முடியாது என்றாலும் தப்பிக்கும் வித்தையை தெரிந்து வைத்திருப்பது நமது தொழில்நுட்பத்தின் சாதனை.

கடல் அலை மட்டத்தில் ஏற்படும் விபரீத மாற்றத்தை வைத்து சுனாமியையும் முன் கூட்டியே உணரக்கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இதில் அடுத்தகட்ட முயற்சி வரப்போகும் நிலநடுக்கத்தை முன்கூட்டி தெரிந்துகொள்வது.

இங்கிலாந்து மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள், லண்டன் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆலன் ஸ்மித், விட்டாலி சிம்யேரெவ் ஆகியோர் தலைமையில் இணைந்து மாஸ்கோவில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து செயல்பாடுகளையும் துவக்கியுள்ளனர்.

"ட்வின் சாட்" என்பது இந்த ஆய்வில் ஈடுபடப் போகிற செயற்கைக்கோள்கள். ஒன்று தொலைக்காட்சி பெட்டி அளவில் இருக்கும். இன்னொன்று அதையும் விட சிறியது. விண்ணில் செலுத்தப்படும் இந்த இரண்டும் சில நூறு கி.மீ. தொலைவில் பூமியை வட்டமடித்துக் கொண்டே இருக்கும்.

எரிமலையின் செயல்பாடுகள் மற்றும் பூமியில் கணிசமான விபரீத மாற்றங்கள் தெரிந்தால் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு செயற்கைகோளில் இருந்து தகவல் வரும். நில நடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதை 2015 ல் விண்ணில் செலுத்த உள்ளனர்

22 Feb 2011

பாஸ்ட்புட் உணவு: குழந்தைகளுக்கு நோய் தாக்கும் அபாயம்



இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் விரைவான பழக்க வழக்கங்களை முழுமையாக பின்பற்றி வருகின்றனர்.
உணவு வழக்க வழக்கங்களில் நவீன வரவான பாஸ்புட் உணவு வகைகளை இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் விரும்பி உண்ணுகின்றனர். இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இளம் தலைமுறையினர் தொடர்ந்து பாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும் போது கேன்சர் உள்ளிட்ட நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளுக்கும் இரண்டாம் தர ரீதியிலான நீரளிவு நோய் ஏற்படலாம் என்றும் பெண்களுக்கு எழும்புறுக்கி நோய், இரத்த சோகை ஏற்படலாம் என்றும் மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் பாஸ்புட் கலாச்சாரத்தால் அங்கு மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மேலும் குந்தைகளிடம் நடத்தப்பட்ட 60 க்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளிலும் இதய நோய் கேன்சர் இளம் வயதிலேயே தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணவியில் மற்றும் உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
ஐந்தில் ஒரு குழந்தை பழம் மற்றும் காய்கறிகளை உணவு உண்பதில்லை என்றும் வெஜிடபிள் உணவு வகைகளை தவிர்ப்பதால் இரண்டாம் தர நீரளவு தாக்கும் ஆபாயம் உள்ளதாக நியூட்ரீசியன் டாக்டர். கேர்ரீ ருக்ஷ்டன் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் பாஸ்புட்(ஜங்புட்) உணவு வகைகளை தவிர்த்து விட்டு இயற்கையான காய்கறி வகைகளை உண்ண வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

Thanks - Lankasri

செயற்கை நுரையீரல் உருவாக்கம்! வெற்றியடைந்துள்ள விஞ்ஞானிகள்




செயற்கை நுரையீரல் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ஆய்வுக்கூடத்தில் நுரையீரலை உருவாக்கி நோயாளிக்கு பொருத்திவிட முடியும். 

வேர் செல்கள் எனும் மூல செல்கள் நம் உடலின் பல்வேறு பாகங்களில் உள்ளன. இந்த செல்களிலிருந்து நம் உடலில் செயல்படும் பல்வேறு உறுப்புகளின் செல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போது நுரையீரலிருந்து எடுக்கப்பட்ட வேர் செல்லிருந்து நுரையீரலை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதற்கு முன்பு மனித உறுப்புகளை குளோனிங் குழந்தை முறையில் பெறும் முயற்சி நடந்தன. 

குழந்தையை வளர்ப்பதற்குப் பதிலாக குறிப்பிட்ட உறுப்பை வளர்க்கும் அம்முறைக்கு தற்போது உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, வேர்ச்செல்களிலிருந்து திசு வளர்ப்பு முறைதான் அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது மற்றும் எளிமையான முறை என்று விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளார்கள். 

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நுரையீரல் திசு வளர்க்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரி செய்யவும் இந்த ஆய்வு உதவும்.





Thanks - Tamil CNN

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்!!!

 


இது உலகின் மிகப்பெரிய குடும்பம். இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தின் மலைப்பாங்கான கிராமமான பக்த்வாங் கிராமத்தில்தான் இந்தக் குடும்பம் வசிக்கின்றது. இதன் மொத்த உறுப்பினர்கள் 181 பேர். 

இந்தக் குடும்பத்தின் தலைவர் ஸியோனாவிற்கு 39 மனைவிமார், 94 பிள்ளைகள், 14 மருமகள்மார், 33 பேரப்பிள்ளைகள். 

எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். இவர்களின் வீடு நான்கு மாடிகளைக் கொண்டது. 100 அறைகள் உள்ளன. அறைகள் தவிர நடமாடும் வழிகளிலும் குடும்பத்தவர்கள் உறங்குகின்றனர். 

அதுவும் முட்டி மோதிக் கொண்டுதான். குடும்பத்தின் தலைவர் ஸியோனா வயது 67 தனக்கே உரிய ஒரு மதப் பிரிவைப் பின்பற்றுகின்றவர். இந்த மதப்பிரிவில் பலதாரத் திருமணத்துக்கும் தாராளமாக இடமுண்டு. 



இவ்வளவு பெருந்தொகை குடும்ப உறுப்பினர்கள் தன்னோடு சேர்ந்து வாழ்வது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்கிறார் இவர். அந்த வகையில் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விஷேட பிறவி என்கிறார். 

39 பெண்களுக்கு கணவனாகவும், மிகப் பெரிய குடும்பத்தின் தலைவனாகவும் இருப்பது இவருக்குப் பெருமையாகவும் உள்ளதாம். 

இந்தக் குடும்பத்தின் இனனொரு முக்கிய அம்சம் இவர்கள் யாருமே அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும், நிவாரணமும் பெறாதவர்கள். 



குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களும் தச்சு வேலை செய்பவர்கள். அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை என்று மார் தட்டிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் இந்தக் குடும்பத் தலைவர் வருடத்துக்குப் பத்துப் பெண்கள் என்ற ரீதியில் திருமணம் செய்து கொண்டவர். 

கிராமத்தவர்கள் இந்த வீட்டை புதிய தலைமுறை இல்லம் என்று அழைக்கின்றனர். இவர்களுக்கு தனியான பாடசாலை, விளையாட்டு மைதானம், தச்சு வேலை செய்யுமிடம், பன்றிப் பண்ணை, கோழிப் பண்ணை, வயல் நிலம், மரக்கறித் தோட்டம், என எல்லாமே உண்டு. இங்கிருந்து கிடைப்பவைகள் எல்லாமே இந்தக் குடும்பத்துக்கே சரியாகிவிடுகின்றது. 

இந்தக் குடும்பத்துப் பெண்கள் தினசரி உணவு தயாரிக்க பல மணித்தியாலங்களைச் செலவிட வேண்டியுள்ளது. 

ஒரு வேளை உணவுக்காக அரிசி மட்டும் 220 இறாத்தல் பொங்க வைக்க வேண்டும் குடும்பத் தலைவரின் மூத்த மனைவிக்கு 69 வயது. இவர் பெயர் சதியாங்கி. 

தினசரி மற்ற மனைவிமார் செய்யவேண்டிய வேலைகள், மருமகள்மார், மகள்மார் செய்யவேண்டிய வேலைகள் என காலையிலேயே பட்டியலிட்டு விடுவார்.

இங்கு எல்லோருடைய துணியும் கைகளால் தான் துவைக்கப்படுகின்றன.

இவர்கள் பின்பற்றும் மதப் பிரிவு ச்சானா என்று அழைக்கப்படுகின்றது. 

ஒரு காலத்தில் இயேசுவோடு சேர்ந்து உலகை ஆள்வோம் என்பது இவர்களின் நம்பிக்கை. 

இந்தக் குடும்பத் தலைவர் முதல் தடவையாகத் திருமணம் செய்தபோது அவருக்கு வயது 17. கடைசித் திருமணம் கடந்தாண்டில் நடந்தது. 

இந்த வீட்டில் இவரின் படுக்கையறை மட்டும்தான் ஆடம்பரமானது. இவர் விரும்பிக் கூப்பிடும் மனைவிதான் அன்றைய தினம் அவருடன் படுக்கைக்குச் செல்ல வேண்டும் மற்ற மனைவிமார் வீட்டின் முதல் மாடியில் உள்ள ஏனைய அறைகளில் இருக்கின்ற கட்டில்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

எப்போதும் இள வயது மனைவிமாரைத்தான் தன்னைச் சூழ அருகில் வைத்துக் கொள்வார். மனைவிமாருக்கு வயது போகப்போக தூரமும் அதிகரிக்கும். 



இருந்தாலும் இவரைச் சுற்றி இவருக்குப் பணிவிடை செய்வதில் மனைவிமார் சலித்துக் கொள்வதே இல்லை. இவருக்குச் செய்கின்ற பணிவிடை கடவுளுக்குச் செய்யும் பணிவிடை எனபது அவர்களின் நம்பிக்கை.




Thanks - Tamil CNN

21 Feb 2011

Balance Sheet of Life – Interesting

Balance Sheet of Life – Very Interesting Balance Sheet of Life – Very Interesting


Our Birth is our Opening Balance!
Our Death is our Closing Balance!
Our Prejudiced Views are our Liabilities.
Our Creative Ideas are our Assets.
Heart is our Current Asset.
Soul is our Fixed Asset.
Brain is our Fixed Deposit.
Thinking is our Current Account.
Achievements are our Capital.
Character & Morals, our Stock-in-Trade.
Friends are our General Reserves.
Values & Behaviour are our Goodwill.
Love is our Dividend.
Children are our Bonus Issues..
Education is Brands / Patents.
Knowledge is our Investment.
Experience is our Premium Account.
The Aim is to Tally the Balance Sheet Accurately.
The Goal is to get the Best Presented Accounts Award.
————————————————————————————————

Some very Good and Very bad things
The most destructive habit……………………..Worry
        The greatest Joy…………………………………………….Giving
       The greatest loss………………………….Loss of self-respect
   The most satisfying work……………………Helping others
  The ugliest personality trait……………………..Selfishness
The most endangered species……….Dedicated leaders
Our greatest natural resource………………..Our youth
The greatest ‘shot in the arm’………….Encouragement
The greatest problem to overcome…………………Fear
The most effective sleeping pill………….Peace of mind
The most crippling failure disease……………..Excuses
The most powerful force in life…………………….. .Love
The most dangerous pariah…………………A gossiper
The world’s most incredible computer…….The brain
The worst thing to be without…………………Hope
The deadliest weapon…………………….The tongue
The two most power-filled words…………..’I Can’
The greatest asset………………………………….Faith
The most worthless emotion……………….Self-pity
The most beautiful attire……………………SMILE!
The most prized possession………………..Integrity
The most powerful channel of communication…….Prayer
The most contagious spirit………………Enthusiasm

The most important thing in life………………GOD THE ALMIGHTY.

20 Feb 2011

சீன பெருஞ்சுவர் மரத்தால் கட்டப்பட்டது - ஆராய்சித் தகவல்




நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனித படைப்புஉலக அதிசயங்களின் பட்டியல்கள் புதிது, புதிதாக அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன. ஆனாலும் என்றென்றும் உலக அதிசயமாக கருதப்படுவது சீன பெருஞ்சுவர்
என்ற பெருமையும் இதற்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக பிரம்மாண்ட மதில் சுவர் எழுப்புவது என்பது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில்(கி.மு. 220-206) கட்டப்பட்டது.
இதன் சில பகுதிகள் மட்டுமே தற்போது சுவராக நீடிக்கிறது. அதன் பிறகு   கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ம் நூற்றாண்டு வரையில் பல்வேறு மன்னர்களின் காலக் கட்டத்தில் கட்டப்பட்டது. இடியும் நிலையில் இருக்கும் பகுதிகளும் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு கிழக்கே ஹெபேய் மாகாணம் ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கில் லோப்நுர் வரையில் பிரதான சுவர், கிளைச் சுவர் என சுமார் 8,850 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்டமாய் நீள்கிறது. மொத்த சுவரும் கற்கள், பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டதாக கருதப்பட்டு வந்தது. ஓக் மரத்தையும் கல் போல பயன்படுத்தி சுவர் கட்டியிருப்பது தொல்பொருள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி லயோனிங் கலாசார நினைவுச் சின்னங்கள் அமைப்பு மற்றும் மேப்பிங் துறை அதிகாரிகள் கூறியதாவது: மரப் பெருஞ்சுவர் பற்றி சீன வரலாறுகளில் கூறப்பட்டுள்ளன. அது உண்மைதான் என தற்போது தெரியவந்துள்ளது.
சீனாவின் வடகிழக்கில் லயோனிங் மாகாணத்தில் டாண்டோங் மற்றும் அதை ஒட்டியுள்ள இடங்களில் ஓக் மரத்தை பயன்படுத்தி மிங் ஆட்சிக் காலத்தில்(கி.பி. 1368 – 1644) பெருஞ்சுவர் கட்டப்பட்டது. பின்னர் மரம் மக்கிப்போன பிறகு, அந்த இடங்களில் கற்களைக் கொண்டு சுவர் சீரமைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

125 ஆண்டு கால கோகோ-கோலா பார்முலா ரகசியம் அம்பலமானதா???




125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் இணையதளம் மூலமாகவும், ரேடியோ மூலமாகவும் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது.
எனினும் “காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல்” பொருட்கள், சர்க்கரை, தண்ணீர், நிறமிகள் என்று மட்டுமே கோலாவில் அச்சிடப்படும். அந்த இயற்கை சுவை கூட்டலில் என்ன பார்முலா என்பது ரகசியம்.
இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.
கோகோ-கோலா தயாரிப்பதற்கான பொருட்களை 2 தொழிலாளர்கள் மட்டும் தயாரித்து வந்ததாகவும் அவர்கள் மூலம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த பார்முலா எழுதப்பட்ட காகிதத்தை அமெரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கிறது கோலா நிறுவனம்.
ஏற்கனவே 1979 ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால் இப்போது இருப்பது போல கோகா கோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.
அவ்விணையத்தளம் வெளியிட்டுள்ள கோக கோலா உற்பத்தி பார்முலா இவைதான்.
Fluid extract of Coca 3 drams USP.
Citric acid 3 oz .
Caffeine 1oz .
Sugar 30 (it is unclear from the markings what quantity is required). 
Water 2.5 gal. 
Lime juice 2 pints 1 qrt. 
Vanilla 1oz .
Caramel 1.5oz or more to colour. 
7X flavour (use 2oz of flavour to 5 gals syrup). 
Alcohol 8oz .
Orange oil 20 drops. 
Lemon oil 30 drops. 
Nutmeg oil 10 drops. 
Coriander 5 drops. 
Neroli 10 drops. 
Cinnamon 10 drops.

நன்றி:லங்காஸ்ரீ வேல்ட்

8 Feb 2011

WIFE and HUSBAND – Very Funny

Poems written by WIFE and HUSBAND


WIFE:


I wrote your name on sand it got washed.
I wrote your name in air, it was blown away.


Then I wrote your name on my heart & I got Heart Attack.


HUSBAND:


God saw me hungry, he created pizza.
He saw me thirsty, he created Pepsi.
He saw me in dark, he created light.
He saw me without problems, he created YOU.


WIFE:


Twinkle twinkle little star
You should know what you are
And once you know what you are
Mental hospital is not so far.


HUSBAND:


The rain makes all things beautiful.
The grass and flowers too.
If rain makes all things beautiful
Why doesn’t it rain on you?


WIFE:


Roses are red; Violets are blue
Monkeys like u should be kept in zoo.
Don’t feel so angry you will find me there too
Not in cage but laughing at you.

6 Feb 2011

The Beauty of Mathematics and the Love of God!!!!!!



Just the math part is good enough, the end is even better..
Beauty of Mathematics!!!!!!!

                       1 x 8 + 1 = 9
                    12 x 8 + 2 = 98
                 123 x 8 + 3 = 987
              1234 x 8 + 4 = 9876
            12345 x 8 + 5 = 98765
         123456 x 8 + 6 = 987654
      1234567 x 8 + 7 = 9876543
   12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321


                       1 x 9 + 2 = 11
                    12 x 9 + 3 = 111
                 123 x 9 + 4 = 1111
              1234 x 9 + 5 = 11111
           12345 x 9 + 6 = 111111
        123456 x 9 + 7 = 1111111
     1234567 x 9 + 8 = 11111111
   12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111


                    9 x 9 + 7 = 88
                 98 x 9 + 6 = 888
              987 x 9 + 5 = 8888
           9876 x 9 + 4 = 88888
         98765 x 9 + 3 = 888888
      987654 x 9 + 2 = 8888888
   9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

Brilliant, isn’t it?
And look at this symmetry:

                   1 x 1 = 1
                11 x 11 = 121
              111 x 111 = 12321
            1111 x 1111 = 1234321
         11111 x 11111 = 123454321
       111111 x 111111 = 12345654321
     1111111 x 1111111 = 1234567654321
  11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

Mind Boggling….
Now, take a look at this…

101%

From a strictly mathematical viewpoint:

What Equals 100%?

What does it mean to give MORE than 100%?

Ever wonder about those people who say they
are giving more than 100%?

We have all been in situations where someone wants you to

GIVE OVER 100%…

How about ACHIEVING 101%?

What equals 100% in life?

Here’s a little mathematical formula that might help
answer these questions:

If:

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Is represented as:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26.

Then:

H-A-R-D-W-O- R- K

8+1+18+4+23+15+18+11 = 98%

And:

K-N-O-W-L-E- D-G-E

11+14+15+23+12+5+4+7+5 = 96%

But:

A-T-T-I-T-U- D-E

1+20+20+9+20+ 21+4+5 = 100%

THEN, look how far the love of God will take you:

L-O-V-E-O-F- G-O-D

12+15+22+5+15+ 6+7+15+4 = 101%

Therefore, one can conclude with mathematical certainty that:
While Hard Work and Knowledge will get you close, and Attitude will
get you there, It’s the Love of God that will put you over the top!
Twitter Bird Gadget