31 Mar 2011

உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதியாட்டத்துக்குள் இந்தியா நுழைந்துள்ளது.





29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. டாஸ் வென்று முதலில் மட்டை வீசத் தீர்மானித்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பானதொரு துவக்கத்தைத் தந்திருந்தனர். ஷேவாக் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார் என்றாலும் 38 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். டெண்டுல்கர் நிதானமாக நின்று விளையாடி 85 ரன்கள் எடுத்தார்.

நடுவில் சில இந்திய விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்திருந்தன என்றாலும் ஆறாம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா சரிவைக் கட்டுப்படுத்தி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் நின்றிருந்ததோடு 36 ரன்களையும் குவித்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் வஹாப் ரியாஸ் மிக அற்புதமாகப் பந்து வீசினார். இந்தியாவின் முக்கிய மட்டைவீச்சாளர்கள் ஐந்து பேரின் விக்கெட்டுகளை இவர் எடுத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் தடவையாக ஒரு ஆட்டத்தில் இவர் ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலும் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை எடுத்திருந்தார்.
இரண்டாவதாக மட்டைபிடித்த பாகிஸ்தான் அணியில் துவக்க ஆட்டக்காரர் ஹாஃபிஸ் 43 ரன்களை எடுத்துள்ளார். மிஸ்பா உல் ஹக் நிதானமாக விளையாடி அரை சதம் எடுத்தாலும் மற்ற வீரர்கள் விளையாடிய விதம் ஏமாற்றம் தரும் விதமாகவே இருந்தது.

இந்தியாவுக்காக பந்து வீசிய ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா இரண்டு விக்கெட்களை எடுத்திருந்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக 85 ரன்களை எடுத்த சச்சின் டெண்டுல்கருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு அரையிறுதியில் நியுஸிலாந்தை வென்று ஏற்கனவே இறுதியாட்டத்துக்குள் நுழைந்துள்ள இலங்கையை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது.

ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை நகரில் இந்த ஆட்டம் நடைபெறும்.

Maldives - Beautiful Sceneries




Extremely Funny


If your father is a poor man,
it is your fate but,
if your father-in-law is a poor man,
it’s your stupidity.

Practice makes perfect.
But nobody’s perfect.
so why practice?

If it’s true that we are here to help others,
then what exactly are the others here for?

Since light travels faster than sound,
people appear bright until you hear them speak.

One should love animals.
They are so tasty.

Behind every successful man, there is a woman
And behind every unsuccessful man, there are two.

“Your future depends on your dreams”
So go to sleep.

Made in India – Jokes!!!


A Japanese tourist hailed a taxi in downtown Delhi and asked to be taken to the international  air port.


On the way, a car zoomed by and the tourist responded, “Ohhh! TOYOTA!! Made in Japan!! Very fast!”


Not too long afterward, another car flew by the taxi. “Ohh! NISSAN!! Made in Japan!! Very fast!”


Yet another car zipped by, and the tourist said, “Ohh! Mitsubishi!! Made in Japan!! Very fast!”


The taxi driver, who was 100% Indian, was starting to get a little annoyed that the Japanese made cars were passing his Taxi, when yet another car passed the taxi as they were turning into the airport. “Ohh! Honda!! Made in Japan!! Very fast!”


The taxi driver stopped the car, pointed to the meter, and said, “That’ll be Rupees 500.”


“Rupees 500? It was so short a ride! Why so much?”


The Taxi driver replied


"Taxi meter, Made in India, Very fast"


LIFE IS A MIRROR OF YOUR ACTION - A STORY


A man and his son were walking in the forest. Suddenly the boy trips and feeling a sharp pain he screams, “Ahhhhh.” Surprised, he hears a voice coming from the mountain, “Ahhhhh!”


Filled with curiosity, he screams: “Who are you?”, but the only answer he receives is: “Who are you?” This makes him angry, so he screams: “You are a coward!”, and the voice answers: “You are a coward!”


He looks at his father, asking, “Dad, what is going on?” “Son,” the man replies, “pay attention!” Then he screams, “I admire you!” The voice answers: “I admire you!”
The father shouts, “You are wonderful!”, and the voice answers: “You are wonderful!”



The boy is surprised, but still can’t understand what is going on.


Then the father explains, “People call this ‘ECHO’, but truly it is ‘LIFE!’ Life always gives you back what you give out! Life is a mirror of your actions. If you want more love, give more love! If you want more kindness, give more kindness!


If you want understanding and respect, give understanding and respect!


If you want people to be patient and respectful to you, give patience and respect! This rule of nature applies to every aspect of our lives.”.

29 Mar 2011

வெளீநாடு வாழ் இந்தியன்-கவிதை

தூர தேசத்தில்
தொலைந்துபோனவர்கள்
காணாததை கண்டதும்
காணாமல் போனவர்கள்

இந்த விழுதுகள்
மரத்தையே
அழுக்கென அறிவிக்கும்

விடுதியையே
வீடாக்கி கொண்டவர்கள்
விடுமுறைக்கு மட்டுமே
வீடு திரும்பும் பறவைகள்

வான் கோழியாய்
வாழ விரும்பும்
மயில் கூட்டங்கள்

வாழ்கை துணைக்கு
வலைபோட்டு தேட
இந்திய கடலுக்கு
மீன் பிடிக்க வருவார்கள்

தமிழ் மொழியே
தரமில்லை என
ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்

பெற்றோர்க்கு
முதியோர் இல்லத்தையே
முகவரியாக்கிய
முன்னோடிகள்

இந்தியாவில் அமெரிக்கனாயும்
அமெரிக்காவில் இந்தியனாயும்
அரிதாரம் கொண்டவர்கள்

அன்னியர் தேசத்தில்
இந்திய அடையாளம்
இந்திய தேசத்தில்
அன்னியர் அடையாளம்

28 Mar 2011

ஜப்பானில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை



ஜப்பானில் 6.5 ரிக்டர் அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஜப்பானில் கடந்த 11-ந் தேதி சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் கடும் சேதம் ஏற்பட்டது. சுமார் 27 ஆயிரம் பேர் பலியானார்கள். பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணுஉலைகள் வெடித்து சிதறின. 

எனவே, அதில் அணு கதிரியக்கம் கசிய தொடங்கியது. பால், குடிநிர் மற்றும் உணவு பொருட்களில் அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 

இடிபாடுகள் அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை. தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.23 மணியளவில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹான்ஷீ நகரில் பூமி குலுங்கியது. 

இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அதிர்ந்து ஆட்டம் கண்டன. இதனால் பதறிய மக்கள் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது என அச்சம் அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். 

சிறிது நேரம் கழித்து சமாதானம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஹான்ஷீ கடலில் வழக்கத்தைவிட சுமார் 1.6 அடி அதாவது 1/2 மீட்டர் உயரத்துக்கு அதிகமாக அலைகள் எழும்பியது. இதை தொடர்ந்து அமெரிக்க பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஜப்பானுக்கு மட்டுமே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் தீவை சுனாமி அலைகள் தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளது. 

இதற்கிடையே 6.5 ரிக்டர் ஸ்கேல் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அமெரிக்காவில் புவியியல் சர்வே மையம் அறிவித்துள்ளது. புமிக்கு அடியில் 5.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. தொடர்ந்து ஏற்படும் பூகம்பத்தால் ஜப்பான் மக்கள் பீதியில் உள்ளனர்.



நன்றி-தமிழ் இஎன் என்.

23 Mar 2011

New 3D Battery May Charge Phones in Seconds and Laptop within Minutes!



Paul Braun and his group of scientists at the University of Illinois have designed and developed a 3D battery that might make it possible to recharge mobile phones in seconds and a laptop within minutes.

The same nanostructure could also be used to charge defibrillators, required in surgeries, without loss of time between pulses.

Apart from the convenience of quick-charging mobiles, laptops and other consumer electronics, this nanostructure can help manufacture batteries that can store a lot of energy, release it fast and recharge quickly thus, helping innovation in electric vehicles, medical devices, lasers and military applications.

"This system that we have gives you capacitor-like power with battery-like energy," said Braun, professor of materials science and engineering at Illinois.

Lithium-ion (Li-ion) or nickel metal hydride (NiMH) rechargeable batteries in use currently suffer from issues like:

1.    Significant performance degradation when they are rapidly charged or discharged.
2.    High volume required to store enough charge for normal usage.

This new nanostructure can solve both these issues resulting in not just a fast charge but batteries that last much longer and take up considerably less space by wrapping a thin film into 3D structure thus, achieving both high active volume (high capacity) and large current.

Braun's group has demonstrated battery electrodes that can charge or discharge in a few seconds, 10 to 100 times faster than current generation bulk electrodes and yet, can perform normally in existing devices.

Braun is particularly optimistic for the batteries' potential in electric vehicles, which would slash charging time from half a day to a few minutes.

If this technology does turn out to be commercially viable to be adopted for commercial devices, it could usher in a new era of ultra slim devices not just for use by general public but also for equipment used by the military and medical fraternity.

One possible use that comes to my mind is being able to use advanced equipment in ambulances so that they may be of more use in the field reducing risk of death by a huge margin.

If you think this new technology could be useful in your line of work, do let us know by commenting below.



Thanks-Techtree.com

21 Mar 2011

பஹ்ரைனில் நடப்பது மக்கள் புரட்சியல்​ல – பிரிவினை​க்கான கிளர்ச்சி -​ டாக்டர் ஷேக் யூசுஃப் அல் கர்தாவி

Prominent Islamic scholar, Sheikh Yusuf al-Qaradawi, says the Bahraini uprising is sectarian


தோஹா:பஹ்ரைனில் நடக்கும் போராட்டம் மக்கள் புரட்சியல்ல. மாறாக ஒரு பிரிவினர் நடத்தும் பிரிவினைக்கான போராட்டம் என சர்வதேச முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் சபையின் தலைவர் ஷேக் யூசுஃப் அல் கர்தாவி தெரிவித்துள்ளார்.
கத்தர் தலைநகர் தோஹாவில் நேற்று முன்தினம் ஜும்ஆ உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது கர்ழாவி கூறியதாவது: எகிப்து, துனீசியா, லிபியா,யெமன் ஆகிய நாடுகளிலிருந்து வித்தியாசமான சூழல் பஹ்ரைனில் நிலவுகிறது.
மேற்கண்ட நாடுகளிலெல்லாம் மக்கள் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கெதிராக விழித்தெழுந்துள்ளார்கள். ஆனால், பஹ்ரைனிலோ, ஒரு பிரிவினர் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் அந்நாட்டின் மீது தங்களது சொந்த விருப்பத்தை நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றனர்.
சொந்த நாட்டுமக்களுக்கெதிரான ஷியாக்களின் கிளர்ச்சியாகும் இது. ஆதலால், இந்த போராட்டம் இதர நாடுகளில் நடப்பது போன்றதல்ல. எதிர்ப்பாளர்களின் பிரிவினைக் கோரிக்கைகளால் 450000 சன்னிகள் அல் ஃபத்தாஹ் மஸ்ஜிதில் ஒன்றுகூடி தங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ப்யர்ல் ரவுண்டபுவுட்டில் திரண்டிருந்தவர்கள் அமைதியாக போராட்டம் நடத்தியதாக கூறுவதை ஏற்றுக்கொள்ளவியலாது. ஆயுதங்களை பயன்படுத்தி, மஸ்ஜிதுகளையும், சன்னி முஸ்லிம்களையும் தாக்கிவிட்டு அமைதியாக போராட்டம் நடத்தியதாக அவர்கள் கூறுகின்றனர்.
எதிர்ப்பாளர்கள் சொந்த நாட்டையும், நாட்டு மக்களையும் மறந்துவிட்டு அந்நிய நாட்டின் தலைவர்களை உயர்த்திக் காட்டியுள்ளனர். அலி காமினி மற்றும் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் புகைப்படங்களை அவர்கள் உயர்த்திப் பிடித்த பொழுதுதான் பிரச்சனை உருவானது. இவர்களிருவரும் பஹ்ரைனின் பிரதிநிதிகளல்லர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்ப்பாளர்கள் ஜி.சி.சியின் தனித்தன்மையை ஏன் கைவிட்டனர் என்பதுக் குறித்து எனக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. இத்தகையதொரு சூழலில்தான் பஹ்ரைன் இளவரசர் அனைவரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள அறிவுடைய சன்னிகளும், ஷியாக்களும் தயாராகினர். ஆனால், இதன் பின்னர் பரஸ்பர பகைமைக்கும், பிரிவினைக்கும் விவகாரம் சென்றுவிட்டது. ஷியா பிரிவினர் முழுவதும் சன்னிகளுக்கெதிராக களமிறங்கியுள்ளதைத்தான் பஹ்ரைனில் காண்கிறோம்.
இத்தகையதொரு போராட்டத்தை இஸ்லாமிய ரீதியில் காணவியலாது. இது ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருக்கெதிராக நடத்தும் கிளர்ச்சியாகவே காண இயலும். எல்லாவித பிரிவினைக்கும் நான் எதிரானவன். ஆதலால் பிரிவினையை ஏற்படுத்தும் கிளர்ச்சிக்கெதிராக எனது குரல் உயர்ந்துள்ளது.
பஹ்ரைனின் ஆட்சியாளர்கள் எதிர்ப்பாளர்களுடன் தொடர்புக்கொள்ள முயன்றனர். அவர்களின் கோரிக்கைகளைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக்கூறி எல்லாவிதமான பிரிவினைக் கோரிக்கைகளிலிருந்து விடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
சொந்த நாட்டை நிர்மாணித்து மக்களை ஐக்கியப்படுத்துபவர்கள்தாம் உண்மையான சீர்திருத்தவாதிகளாவர். இவ்வாறு கர்தாவி கூறினார்.
நன்றி-தூது ஆன்லைன்

20 Mar 2011

லிபியா மீதான போர் துவங்கியது:அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் லிபியா மீது குண்டு வீச்சு?



லிபியா அருகே அமெரிக்கா தயாராக நிறுத்தி வைத்திருந்த விமானந்தாங்கி போர் கப்பல்களில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள் லிபியா மீது சரமாரியாக குண்டுகளை வீசின. கப்பலில் இருந்து ஏவுகணைகளும் வீசப்பட்டன. அமெரிக்காவுடன் இங்கிலாந்து, பிரான்சு நாடுகளும் சேர்ந்து லிபியா மீது தாக்குதலை நடத்தின.

41 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருக்கும் கடாபிக்கு எதிராக மக்கள் திரண்டனர். ஆனால் மக்கள் புரட்சிக்கு அடிபணியாத கடாபி அவர்கள் மீது அடக்கு முறைகளை கையாண்டார். போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

புரட்சி படையினர் 4 நகரங்களை கைப்பற்றி இருந்தனர். அந்த நகரங்கள் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுவீசி 3 நகரங்களை ராணுவம் மீட்டது. இன்னொரு முக்கிய நகரமான பென்காசி நகரத்தை பிடிக்கவும் விமான தாக்குதல் நடந்து வந்தது.

ராணுவ தாக்குதலில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனவே ராணுவ தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா. சபை அதிபர் கடாபியை கேட்டுக் கொண்டது. அதே போல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கடாபிக்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால் கடாபி இதை ஏற்கவில்லை.

தொடர்ந்து ராணுவ தாக்குதலை நடத்தி வந்தார்.இதையடுத்து நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்பு சபை கூடி இதுபற்றி ஆலோசனை நடத்தியது. அப்போது லிபியா பொதுமக்களை காப்பாற்ற ராணுவ நடவடிக்கை எடுக்க ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா, லிபியா மீது தாக்குதல் நடத்த தயாரானது. இது தொடர்பாக இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, போன்ற நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தியது.

நிலைமை மோசமானதை தொடர்ந்து கடாபி போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தார். ஆனாலும் பென்காசி நகரை மீட்க தொடர்ந்து ராணுவ தாக்குதல் நடந்து வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, லிபியா மீது திடீர் போர் தொடுத்தது. லிபியா அருகே அமெரிக்கா விமானந்தாங்கி போர் கப்பல்களை தயாராக நிறுத்தி வைத்திருந்தது. அதில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள் லிபியா மீது சரமாரியாக குண்டுகளை வீசின. கப்பலில் இருந்து ஏவுகணைகளும் வீசப்பட்டன. அமெரிக்காவுடன் இங்கிலாந்து, பிரான்சு நாடுகளும் சேர்ந்து லிபியா மீது தாக்குதலை நடத்தின.

தலைநகரம் திரிபோலி, மற்றும் பென்காசி, சிர்ட், பிசரதா, சுவாரா ஆகிய நகரங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன. இவை தவிர லிபியா படைகள் முகாமிட்டுள்ள பல்வேறு இடங்களிலும் தாக்குதல் நடந்தன. மொத்தம் 20 இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.லிபியாவை சுற்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா நாடுகளில் 25 போர் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றில் இருந்து 110 ஏவுகணைகள் லிபியா மீது ஏவப்பட்டன.

லிபியா மீது முதல் முதலில் பிரான்சு விமானம் தான் குண்டு வீசியது. அதை தொடர்ந்து மற்ற நாட்டு விமானங்கள் குண்டு வீசின. குண்டு வீச்சில் லிபியாவின் ஏராளமான ராணுவ டாங்கிகள், பீரங்கிகள், கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா கூட்டுப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.   ஆனால் இதை லிபியா மறுத்து உள்ளது.

அமெரிக்க கூட்டு படைகள் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 48 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 150 பேர் காயமடைந்து உள்ளனர் என்று லிபியா அறிவித்து உள்ளது. அமெரிக்கா போர் தொடுத்ததும் அதிபர் கடாபி வானொலியில் செய்தி ஒன்று வெளியிட்டார். அவர் கூறும் போது மேற்கத்திய நாடுகள் நமது நாட்டில் தங்கள் காலனியாக அடிமைப்படுத்த போர் தொடங்கி உள்ளன.

இதை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்றார். அமெரிக்கா கூட்டு படைகள் தாக்குதல் தொடர்வதை வரவேற்கும் வகையில் புரட்சி படையினர் தெருக்களில் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

லிபியா மீது அமெரிக்கா கூட்டு படைகள் தாக்கியதற்கு இந்தியா, சீனா, மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.


13 Mar 2011

இதுவரை உலகில் ஏற்பட்டுள்ள சுனாமிகளும் அழிவுகளும்?




இதுவரை உலகில் ஏற்பட்டுள்ள சுனாமிகளும் அழிவுகளும்:

* 1755 - ல் போர்ச்சுகலில் ஏற்பட்ட சுனாமியில் 60,000 பேர் பலியாகினர்.
*1883 -ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் 36,000 பேர் பலியாகினர்.
* 1908 - ல் இத்தாலியில் ஏற்பட்ட சுனாமியில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகினர்.
* 1896 - ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 27,000 பேர் பலியாகினர்.
* 1923 -ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 1 -  1 / 2  லட்சம் பேர் பலியாகினர்.
* 1933 - ல் ஜப்பானில் ஏற்பட்ட அடுத்த சுனாமியில் 3,000 பேர் பலியாகினர்.
* 1960 - ல் சிலியில் ஏற்பட்ட சுனாமியில் 23, 000 பேர் பலியாகினர்.
* 1976 - ல் பிலிப்பைன்சில் உருவான சுனாமியில் 8,000 பேர் பலியாகினர்
* 1998 - ல் பப்பூவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகினர்.
* 2004 - ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல நாடுகளைத் தாக்கியது. தொடந்து இந்தியா,  இலங்கை மற்றும் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியால் அணு உலை வெடிப்பு : கதிர் வீச்சு அபாயம்!!!




ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், அதை தொடர்ந்து உருவான சுனாமியால் முக்கிய அணுமின் நிலையம் ஒன்றில், நேற்று பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதனால், கதிர்வீச்சு அபாயம் உருவாகியுள்ளது. அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாடு முழுவதும், "அணு சக்தி உஷார்" நிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ராட்சத சுனாமி அலைகள் நாட்டின் வடகிழக்கு பகுதியைத் தாக்கின. இப்பகுதியில் தான், புக்குஷிமா மற்றும் ஒனகாவா என்ற இரு அணுமின் நிலையங்கள் உள்ளன. தலைநகர் டோக்கியோவில் இருந்து 250 கி.மீ., வடகிழக்கில் உள்ள புக்குஷிமா நிலையத்தில், இரண்டு அணுமின் தயாரிப்பு பிரிவுகள் உள்ளன. இந்த இரண்டிலும் ஆறு அணுமின் உலைகள் இயங்கி வருகின்றன. சுனாமி தாக்கிய போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, புக்குஷிமா அணுமின் நிலையத்தின் வெளிப்புறச் சுவர் வரை வந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டால், அணுமின் உலைகள் தாமாகவே செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அணு உலைகள் தாமாகவே செயல்பாடுகளை நிறுத்தி விட்டன. இதைத் தொடர்ந்து கதிர்வீச்சு ஏதேனும் நிகழ்ந்திருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்ததால், புக்குஷிமா உள்ளிட்ட வடபகுதிகளில் இயங்கும் ஐந்து அணுமின் நிலையங்களில், "அணுமின் அவசர நிலை" பிறப்பிக்கப்பட்டது.
அதேநேரம், புக்குஷிமா மற்றும் ஒனகாவா அணுமின் நிலையங்களில் குளிரூட்டும் முறைகளில் (கூலிங் சிஸ்டம்) சிக்கல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அடுத்த சில மணி நேரங்களிலேயே ஒனகாவா நிலையத்தில் அதுபோன்ற சிக்கல் எதுவும் இல்லையென அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இருந்தாலும், புக்குஷிமாவில், அணு உலை குளிரூட்டும் முறையின் செயல்பாட்டில் சிக்கல் தொடர்ந்தது.
நிலநடுக்கத்திற்கு பின், அணுசக்தி தயாரிக்க உதவும், யுரேனியம் செறிவூட்டும் கொள்கலனில் நிரப்பப்பட்டிருக்கும் வெப்ப தணிப்பு திரவம் (கூலன்ட்) கசிந்து வெளியேறியதும், அதன் அளவு குறைந்திருந்ததும் கண்டறியப்பட்டன.
இதனால் தான், குளிரூட்டும் முறையின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், பிரதமர் நவோட்டோ கான் வெளியிட்ட அறிக்கையில், "கதிர்வீச்சு அபாயம் இல்லை" என தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று நண்பகல் 12 மணியளவில், புக்குஷிமா நிலையத்தில், ஒன்றாம் எண் அணு உலையில் உள்ள நான்கு கட்டடங்களில் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இக்காட்சி நேற்று அந்நாட்டு "டிவி"களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. அக்கட்டடப் பகுதிகள் வெகுதூரத்துக்கு வெடித்து சிதறுவதும், கட்டடத்தில் இருந்து பயங்கரப் புகை வெளியேறுவதும் காட்டப்பட்டன.
முதல் அணுமின் உலையை இயக்கி வரும், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம், இவ்விபத்தில் தங்களது ஊழியர்கள் பலர் காயம் அடைந்ததாக தெரிவித்துள்ளது. ஒன்றாம் எண் உலையின் கதி என்னவானது என்பது பற்றிய முழு விவரமும் வெளியாகவில்லை.  அதேநேரம், கட்டடத்தின் வெளிப் பகுதியில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் சீசியம் மற்றும் ஐயோடின் ஆகிய தனிமங்கள் சிதறிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனிமங்கள் சிதறிக் கிடந்ததையும், வெப்பத்தணிப்பு திரவம் கொள்கலனை விட்டு வெளியேறியதையும் வைத்து பார்க்கும் போது, கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, புக்குஷிமா அணுமின் நிலையத்தைச் சுற்றி 20 கி.மீ., சுற்றளவில் வசித்து வந்த ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். பிரதமர் நவோட்டோ கான், புக்குஷிமா பகுதியை ஹெலிகாப்டரில் சென்று நேற்று பார்வையிட்டார்.
இதையடுத்து அணுமின் நிலைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், "புக்குஷிமாவின் ஒன்றாம் எண் தொழிற்சாலை தன் திறனை இழந்து விட்டது. நிலநடுக்கத்தை அடுத்து வெப்பத் தணிப்பு திரவம் கசிந்தது தான் இந்தத் திறன் இழப்புக்கு முக்கிய காரணம்" என்று கூறப்பட்டுள்ளது.
ன்றி-இந்நேரம்

10 Mar 2011

அரபகக் கிளர்ச்சிகளினூடே முஸ்லிம் விரோதிகளின் கை: மக்கா தலைமை இமாம்.



மக்கா தலைமை இமாமும் சவூதி மேல்மட்ட மத அறிஞர் சபையின் தலைவருமானஷேக் அப்துல் அஸீஸ் அப்துல்லா ஆல் அல் ஷேக்,  அரபு நாடுகளில் கிளர்ச்சி என்னும் பெயரில் முஸ்லிம் மத விரோதிகள்
கை வரிசை காட்டுகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
" இந்த கிளர்ச்சிகளின் நோக்கம் சமுதாயத்தை பிளவுக்கும் குழப்பத்திற்கும் உட்படுத்தி தங்கள் 'வசத்தில்' எடுத்துக்கொள்வதே ஆகும் " என்றார் அவர்

"புதுமை என்ற பெயரில் குழப்பங்களை கொண்டு வருவது முஸ்லிம்களின் இயல்பிலில்லை"  என்றார் தலைமை இமாம்.

சவூதி அரபிய அரசாலோசனை குழும(ஷூரா கவுன்சில்) பாதுகாப்பு அவை உறுப்பினர் டாக்டர்.நவாஃப் அல் ஃபகம்  கூறுகையில்,
"ஷரியா சட்டத்தின் படி இயங்கும் நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டிருப்பதன் காரணம் அவை குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்பதாலேயே தவிர கருத்துரிமைக்கு எதிர்ப்பென்று எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார்
.


ன்றி-இந்நேரம்

சீனாவில் ஒரு குழந்தை திட்டம் முடிவுக்கு வருகிறது!!!



சீனாவில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஒரு குழந்தை திட்டம்,  வரும் காலங்களில் விலக்கி கொள்ளப்பட உளளது. அரசின் இந்த முடிவால் சீன மக்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.

சீன அரசு தன்னுடைய நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக ஒரு குழந்தை திட்டத்தை கடந்த 1970ஆம் ஆண்டுகளில்  கொண்டு வந்தது.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றால் பெற்றோர்களுக்கு தகுந்த தண்டனை மற்றும் சலுகைகள் ரத்து போன்றவை கடுமையாக பின்பற்றப்பட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்ட போதிலும் சட்டம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்ட வரப்போவதாக நேஷனல் கமிட்டி ஆப் பாப்புலேசன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் துணை இயக்குனர் வாங்க்யூகிங் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் முதலில் பெண் குழந்தை பிறந்தால் அவர்கள் இரண்டாவது குழந்தை பெற அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வமைப்பின் மற்றொரு இணை இயக்குனரான ஜாங்லீ என்பவர் கூறுகையில் ஒரு குழந்தை திட்டத்தால் இளைஞர் மற்றும் வயதானவர்களின் இடையேயான எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.கடந்த 2009ஆம் ஆண்டில் உள்ள வயதானவர்களின் எண்ணிக்கை 8.5 சதவீதமாக இருப்பது வரும் 2030 ஆண்டுகளில் 17.5 சதவீதமாக அதிகரிக்க கூடும் என்று அரசு அஞ்சுவதே ஒரு குழந்தை திட்டத்தை மாற்றி அமைப்பதன் நோக்கமாகும்.



ன்றி-இந்நேரம்.

World’s Most Amazing Driving Road – United Arab Emirates





World’s Greatest Driving Road

Just have a look what they have created in a desert. The Jebel Hafeet Mountain Road in the United Arab Emirates (UAE) is the greatest driving road in the world. Stretching for 7.3 miles and climbing nearly 4,000 feet, it boasts 60 corners and a surface so smooth that it would flatter a racetrack. It could easily be described as the eighth wonder of the world, but almost nothing is known about its creation.The road is cut into the Jebel Hafeet Mountain , the highest peak in the United Arab Emirates , the oil-rich Persian Gulf state. The mountain spans the border with Oman and lies about 90 minutes’ drive southeast of the thriving city of Dubai . It looks down upon a dusty, desert landscape that belies a nation of astonishing wealth.

7 Mar 2011

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் மூட்டைப் பூச்சியால் கடும் தொல்லையை அனுபவித்த பெண்!




பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் மூட்டைப்பூச்சிகளால் கடிக்கப்பட்டு தொல்லையை அனுபவித்த அந்த விமான சேவையின் வழமையான பயணி சேன் செல்கர்க் அது சம்பந்தமான படங்களை இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

ஜனவரி மாதம் 28ம் திகதி லொஸ் ஏன்ஜல்ஸிலிருந்து பெங்களூர் நோக்கி செல்லும் விமானத்திலேயே இவருக்கு இந்த தொந்தரவு ஏற்பட்டுள்ளது. 

விமானத்துக்குள் இவருக்கு வழங்கப்பட்ட போர்வையிலேயே இந்த மூட்டைப் புச்சிகள் இருந்துள்ளன. இவர் போர்த்திக் கொண்டதும் அவரின் உடைகளிலும் அவை தொற்றிக் கொண்டு உடம்பின் பெரும் பகுதியைப் பதம் பார்த்துள்ளன. 

28 வயதான இந்தப் பெண் இந்த விமான சேவையின் வழமையான ஒரு பயணி ஆவார். 



பெங்களூர் மற்றும் ஹீத்ரு விமான நிலையங்களில் இவர் இது பற்றி முறையிட்டபோதிலும் இவருக்கு எவ்வித உதவியையும் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுத்து விட்டனர். 

இந்த மூட்டைப் பூச்சிகள் எல்லாமே மிகவும் கொழுத்துப் போய் இரத்த வெறியுடன் காணப்பட்டதாக செல்கர்க் தனது இணையத்தளப் பக்கத்தில் எழுதியுள்ளார். 

விமானத்துக்குள்ளும் விமான ஊழியர்களிடமிருந்து எவ்வித உதவியும் தனக்குக் கிடைக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
.


நன்றி-தமிழ் சிஎன் என்.

6 Mar 2011

பென் டிரைவை எவ்வளவு நாளைக்கு நாம் பயன்படுத்தலாம்?



உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? 

ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. 

இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம். பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். 

அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். 

அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம். ஆனால் நாள் ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ் ட்ரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். 

எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம். ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது. 

எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் பிளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும். 

கவலைப் படாதீர்கள். பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். 

உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கு
ம்


Thanks-Tamil Cnn

நெரிசல் இடங்களை கடக்க விமானம் போல் பறந்து செல்லும் நவீன கார்; சாதாரண பெட்ரோலில் ஓடும்!



சமீப காலமாக உலகம் முழுவதிலும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. 

இதனால் திட்டமிட்டப்படி ஒரு இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் விமானம் போல் பறந்து சென்று கடந்து சென்றால் என்ன? என்று நமக்கு தோன்றும். 

இதையே தற்போது நிஜமாக்கி இருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த டெரபுஜியா டிரான்சிசன் நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்துள்ள நவீன கார் சாலையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்திலும், ஆகாயத்தில் 185 கி.மீ. வேகத்திலும் பறக்கும். 

இந்த காருக்கு விமானத்திற்கு பயன்படுத்தும் பெட்ரோல் தேவை இல்லை. சாதாரண பெட்ரோலே போதும். இதன் விலை ரூ.90 லட்சம் ஆகும். 

டெரபுஜியா நிறுவனத்தை சேர்ந்த ரிச்சர்டு ஜெர்ஷ் கூறும் போது, கார் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த விமானத்தை முதலில் விமான நிலையங்களில் இருந்து இயக்க முடியும். தற்போது 100 பறக்கும் கார்களுக்கு ஆர்டர் வந்துள்ளது. 

இந்த கார் சாலையிலும் ஓடும். ஆகாயத்திலும் பறக்கும் இவற்றை இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரித்து விடுவோம் என்றார். 

டெரபுஜியா நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் டயட்ரிச் கனடியன் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பறக்கும் கார்களை நாங்கள் 28 தடவை சோதனை செய்து பார்த்து விட்டோம். இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. 

இந்த பறக்கும் கார்களை இயக்குவது எளிது. வருங்காலத்தில் பறக்கும் கார்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகும். ஆகாயத்தில் வானிலை சரி இல்லாவிட்டால் விமானங்களை இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. 

ஆனால் இந்த பறக்கும் கார்கள் சாலை, ஆகாயம் இரண்டிலும் பறப்பதால் இதற்கு மவுசு அதிகமாக உள்ளது என்றார்



Thanks-Tamil enn

2 Mar 2011

ஏப்ரல் 13 இல் தமிழக, கேரள தேர்தல்




தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற உள்ளன.
``தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தல் அறிவிக்கை மார்ச் 19-ம் தேதி வெளியாகும், தேர்தல் நடைபெறும் தேதி ஏப்ரல் 13. தமிழ்நாடு, கேரளத்தைப் போல, புதுச்சேரியும், அதே தேதியில் தேர்தலைச் சந்திக்கும்,’’ என்றார் தேர்தல் ஆணையர் குரேஷி.
தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரளத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30. வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்படும்.
தமிழ்நாட்டில் நாலரைக் கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களும், புதுவையில், 80 லட்சம் வாக்காளர்களும், கேரளத்தில் 2.29 கோடி வாக்காளர்களும் உள்ளனர்.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7 மற்றும் மே 10 ஆகிய நாட்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
அஸ்ஸாம் மாநிலத்தில், ஏப்ரல் 4 மற்றும் 11 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமிலும் வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெறும்.
முதல் முறையாக, வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தத் தேர்தலில் நேரில் வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில், முதல் முறையாக, வாக்காளர்கள் புகார் தெரிவிக்க, கால்சென்டர் எனப்படும் அழைப்பு ஏற்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 1965 என்ற எண்ணில் அந்த மையங்களுடன் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம் என குரேஷி தெரிவித்தார்


1 Mar 2011

பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி: விஞ்ஞானிகள் தகவல்!



அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி கிரக் லவ்க்ளின். இவர் பூமியின் மதிப்பை கணக்கிட்டார்.
தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற சக்தி வாய்ந்த விண்வெளி ஓடத்தை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது.
அது விண்வெளியில் உள்ள அனைத்து கிரகங்களையும் படம் பிடித்து அனுப்புகிறது. இதன் மூலம் கிரகங்களின் தன்மைகள் அவை குறித்த அதிசய தகவல்கள் கிடைத்து வருகின்றன. அதன்படி பூமி மீது பறந்து கெப்லர் விண்கலம் சுமார் 2 ஆண்டுகளாக அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் பூமியின் மதிப்பை அவர் கணக்கிட்டுள்ளார்.
பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி என அவர் தெரிவித்துள்ளார். பூமியின் வயது, அதன் அளவு மற்றும் தட்டவெப்ப நிலை உள்ளிட்ட மற்ற தன்மைகளை கொண்டு அவர் கணக்கிட்டுள்ளார். பூமி மிகவும் அதிசயமானது என்றும் வர்ணித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தின் மதிப்பு வெறும் ரூ.7 லட்சம் மட்டுமே என்றும் வெள்ளி கிரகத்தின் மதிப்பு அதை விட குறைவு என்றும் அவர் கணக்கிட்டுள்ளார். வான்வெளியில் 1235 க்கும் மேற்பட்ட கிரகங்கள் உள்ளன. அவை வாழ தகுதியற்றவைகளாக உள்ளன. இதனால் அவை மதிப்பற்றவைகளாக உள்ளன என்றும் கூறியுள்ளார்.
Thanks-Lankasri 

புதிய பாதையில் பிரவேசிக்கும் இன்டர்நெட்!!!


இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

Internet Protocol version 4 (IPv4) என அழைக்கப்படும் இந்த முறையானது, 1981ல் தொடங்கப்பட்டது. தற்போது இதன் திறன் முழுமையும் பயன்படுத்தப் பட்டுவிட்டதால், இனிமேல் முகவரிகளை வழங்க இயலா நிலைக்கு நாம் நெருங்கி விட்டோம்.

சென்ற பிப்ரவரி 1 அன்று தான், முகவரிகளைத் தரும் தொகுதிகளில் இறுதி தொகுதி வழங்கப்பட்டது. ஆசிய பசிபிக் நாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட முகவரிகள் எண்ணிக்கை 2012ல் அல்லது அதற்கும் சற்று முன்னதாக மொத்தமாகக் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அடுத்து புதியதாக 128 பிட் அளவில் செயல்படும் IPv6 திட்டம் அமல்படுத்தப் பட இருக்கிறது. இந்த மாற்றம் நம் ஊரில் தொலைபேசிகளுக்கான எண்கள் ஏழு இலக்கத்திலிருந்து எட்டு இலக்கத்திற்கு மாறுவது போல் ஆகும்.

ஆனால் இன்டர் நெட்டில், முகவரிக்கான திட்ட மாற்றம் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சம்பந்தப்பட்டதாகும். IPv6 திட்டத்தின் அடிப்படையில் தரப்படும் முகவரிக்கு, கம்ப்யூட்டர் கட்டமைப்பில் எட்டு ஸ்லாட்டுகள் தேவைப்படும்.

ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சாதனங்களும், சார்ந்த சாப்ட்வேர் தொகுப்புகளும் நான்கு ஸ்லாட்டுகள் என்ற அளவிலேயே இதற்கான வசதியைக் கொண்டுள்ளன. ஜப்பான் போன்ற நாடுகள் இந்த மாற்றத்திற்கு தேவைப்படும் கட்டமைப்பு மாற்றத்தில் 75% அளவு மேற்கொண்டு இப்போதே தயாராக உள்ளனர்.

ஆனால் இந்தியாவில் இது குறித்த விழிப்புணர்வும் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. இந்தியாவில் உள்ள நெட்வொர்க்குகளில் 6% சாதனங்கள் தான் புதிய IPv6 திட்டத்திற்குத் தயாராய் உள்ளன. நெட்வொக்கில் பயன்படுத்தப் படும் ரௌட்டர்கள், ஸ்விட்ச்கள் மற்றும் சர்வர்கள் இந்த IPv6 திட்டத்தினை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அப்கிரேட் செய்யப்பட வேண்டும்.

இல்லை எனில், இணைய தளங்களுக் கிடையேயான இணைப்பு பிரிந்து செயல்படும் வாய்ப்பு ஏற்படும். இந்திய இணைய பயனாளர்கள், இணையத்தில் ஒரு பகுதியினைப் பயன்படுத்த இயலா நிலை ஏற்படும்.

வீடுகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைய இணைப்பு பெறுபவர்கள் இந்த மாற்றம் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. இதில் பயன்படுத்தப் படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் IPv6 திட்டத்துடன் இணைவாகச் செயல்படும் வகையிலேயே இருக்கின்றன.

வீடுகளில் பயன்படுத்தப் படும் மோடம் அப்கிரேட் செய்யப்படும் நிலையில் இருந்தால், இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தியினை வழங்கும். இந்த மாற்றத்தினால் அதிக சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள், நிறுவனங்கள் மற்றும் மத்திய நிலையில் இயங்கும் சில குழுமங்களாகும்.

இந்த தகவல்களை ஆசிய பசிபிக் நெட்வொர்க் இன்பர்மேஷன் சென்டரின் முன்னால் செயல் இயக்குநர் குசும்பா தெரிவித்தார். அரசைப் பொறுத்தவரை, அரசின் இணைய தளங்கள், நெட்வொர்க் சாதனங்கள் அனைத்தும் இதற்கென அப்டேட் செய்யப்பட வேண்டும்.

இல்லை எனில் மக்களுக்கு சேவை கிடைக்காது என இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனக் கூட்டமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கென இன்டர்நெட் சேவை நிறுவனங்கள், நெட்வொர்க் நிறுவனங்கள் மற்றும் அரசுக்குக் கூடுதல் மூலதன நிதி தேவைப்படும்.

விரைவில் அரசும் நிறுவனங்களும் விழித்துக் கொண்டு செயல் பட்டால், சிக்கலை, அது வரும் முன் எதிர்கொண்டு நாம் தயாராகிவிடலாம்

Thanks-Tamil CNN
Twitter Bird Gadget